பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

1644539607 navy 2
1644539607 navy 2

இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி (Umar Farooq Burki) நேற்று (10) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தளபதியுடனான மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இதற்கிடையில், கடற்படைத் தளபதி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு புதிய நியமனத்தின் பொறுப்பான கடமைகளை வெற்றிகரமாகச் செய்ததற்காக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் மற்றும் கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான சில விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன. மேலும், நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் சப்தர் கானும் (Muhammad Safdar Khan) கலந்துகொண்டார்.