வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவத்தினரால் கடை கட்டி முதியவரிடம் கையளிப்பு

IMG 9414
IMG 9414

வவுனியாவில் வசிக்கும் அன்னையொருவருக்கு இராணுவத்தினரின் நிதி உதவியுடன் மரக்கறி கடை ஒன்று கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா – கனகராஜன் குளத்தில் வசிக்கும் விக்னேஸ்வரி இராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கறி கடை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடைக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் திருடப்பட்டது.

IMG 9420 Copy

 இதனையடுத்து குறித்த அன்னையின் வாழ்வாதாரம் பின்தங்கியிருந்ததையடுத்து குறித்த பகுதியில் உள்ள 561 வது காலாட்படை படையின் தளபதியும், இராணுவத்தினரும் இணைந்து மரக்கறி கடையினை புதிதாக அமைத்து 18.02.2021 அன்றையதினம் குறித்த அன்னையிடம் கையளித்துள்ளார்கள். 

IMG 9436

குறித்த கடை கையளிக்கும் நிகழ்வில்56 ஆவது படை பிரிவை சேர்ந்த 561 மற்றும் 562 காலாட்படையின் தளபதிகள், 16 ஆவது சிங்க றெஜிமன்ட் மற்றும் 17 ஆவது விஜயபாகு றெஜிமன்ட் ஆகிய படை பிரிவின் கட்டளை அதிகாரிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.