நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

PARLIAMENT 3
PARLIAMENT 3

நாட்டின் தற்போது நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கான யோசனை ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலை என்பன தொடர்பில் இதன்போது கருத்துகளை முன்வைக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவை ஆலோசனை சபைக் கூட்டம் உள்ளிட்ட பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.