வவுனியா நகரசபையால் நகரப் பகுதியில் காணப்படும மரக் கழிவுகளை துகள்களாக்கும் செயற்பாடு நேற்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இயற்கை பசளை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் மரம் மற்றும் இலைகுலைகளை துகளாக்கும் இயந்திரம் அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட துகள்களாக்கும் இயந்திரத்தை கொண்டு வீதியோரங்களில் காணப்படும் மரக் கிளைகள், இலை குலைகள் என்பவற்றை துகள்களாக்கி அகற்றும் நடிவடிக்கை நகரசபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் உத்தியோதகத்தர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்