30 தேங்காய்களை திருடிய சம்பவம்: சந்தேக நபர் பிணையில் விடுதலை

vilakam
vilakam

30 தேங்காய்களை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காலி – யடகல பகுதியில் உள்ள தமது காணியில் கடந்த சனிக்கிழமை தேங்காய்களை திருடியதாக அதன் உரிமையாளரால் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.