ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி, ஒக்டோபர் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.