கொரோனா தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைவு

7d2d07ce recovered 1
7d2d07ce recovered 1

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 200 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 646,948 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.