நாடளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் சதொசவில் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் அதிகளவில் நாடிவரும் நிலையில் நீண்ட வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருக்கின்ற சதொச விற்பனை நிலையத்தில் அங்கர், சீனி,பருப்பு, அரிசி ஆகிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதை அவதானிக்க முடிந்தது
ஏனைய நகர்ப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகரிக்கப்பட்ட விலையில் பொருட்கள் விற்பனையாகின்ற போதும் சதொச விற்பனை நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழைய விலைகளில் அங்கர் விற்பனையாகிய நிலையிலும் சீனி,பருப்பு, அரிசி ஆகிய பொருட்கள் ஏனைய வர்த்தக நிலையங்களை விட குறைந்த நிலையில் விற்பனையாவதிலும் அதனை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு மக்கள் முண்டியடித்து பொருட்களை பெற்றுக் கொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது