ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது மக்கள் விடுதலை முன்னணி

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) நிராகரித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செயதியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.