யாழ்ப்பாணம், நவாலிப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறைக் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவாலி, ஆனந்தா வீதி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அடித்து நொறுக்கிவிட்டு அதற்குத் தீ வைத்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.