பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு

கைது 1
கைது 1

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் காவல்துறை அதிரடிப்படையினரால் 67 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய், 10,115 லீற்றர் டீசல் என்பவற்றை காவல்துறை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்திலேயே அதிகளவில் எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது