யாழ்ப்பாணம் – கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கிப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் ஆளியை செயற்படுத்த முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது