மட்டக்களப்பு கிரான் பகுதியில் கடந்த ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் குற்றமற்றவர்களாக அறிவித்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கிரான் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு சந்தேகநபர்களை விடுவித்து நீதவான் நேற்று உத்தரவிட்டதாக தெரிவிககப்படுகிறது.