மீண்டும் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள்

IMG 20220428 084407
IMG 20220428 084407

நாடளாவிய ரீதியில் இன்றும் (05) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடப்பட்டு காணப்படுகின்றன. 

இந்நிலையில் நாட்டில் நீண்டகாலமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இருப்பினும், இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் நேற்று (04) கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.