இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்!

bus
bus

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும்  தெரிவித்துள்ளார்.

டீசல் கப்பல் இன்னும் நாட்டை வந்தடையாததால் பேருந்துகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்