மின் உற்பத்திக்கு டீசல் வழங்க முன்னுரிமை – எரிசக்தி அமைச்சர்

124427938 kanchanawijesekera02
124427938 kanchanawijesekera02

நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெற்றிக் தொன் டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளொன்றுக்கு1000 – 1500 மெற்றிக் தொன் டீசல் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்றார்.

நுரைச்சோலையில் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

போதுமான ஒக்டென் 92 பெற்றோல் மற்றும்  சூப்பர் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒக்டேன் 95  பெற்றோலுக்கு மாத்திரம் சிறியளவு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒட்டோ டீசல் வரையறையுடன் விநியோகிக்கப்படுகிறது. மசகு எண்ணெய் மற்றும் ஒக்டேன் 95  பெற்றோல் துறைமுகத்தில் தரையிறக்க தயார் நிலையில் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த டீசல் இறக்குமதி மே 11 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  எனினும், அது 2 நாட்கள் தாமதமாகக்கூடும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவித்த அவர், போதியளவு கையிருப்பு தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாளாந்தம் ஏறக்குறைய 3000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, மற்றுமொரு தொகை பெற்றோல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், டீசலை பதுக்கிவைக்கவோ, தேவையான அளவுக்கு மேல் கொள்வனவு செய்யாமலோ இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.