யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில், நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்
யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்தார்.இவர் தற்போது பிரான்ஸில் வசித்துவருகின்றார் எனவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது, நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.