இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவாகும் – ஜனாதிபதி

1573986441 Gotabya Rajapaksha 2 2
1573986441 Gotabya Rajapaksha 2 2

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவொன்றின் மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையின்மையை உருவாக்கும் முயற்சிகளை நிராகரித்து, சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் வலுப்படுத்துமாறும் ஜனாதிபதி  பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.