ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தற்போது கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றிரவு 9 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.