முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.