அமரகீர்த்தி கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் கைது!

kaithu

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருந்து சாரதியாக பணிபுரிந்துவரும் 29 வயதுடைய குறித்த சந்தேகநபரை நிட்டம்புவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீரிதி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் நாடாளுமன்ற உறுப்பினர் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் இருந்து தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.