வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்திய சாலைகளிலும் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு உடனடி தேவையாக உள்ள 110000.00 (ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா) பெறுமதியான கண் சத்திர சிகிச்சைக்கு தேவையான மருந்துப் பொருட்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தின் நிர்வாகத்தினரால் பணிப்பாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.