அமரகீர்த்தி நா. உறுப்பினர் அத்துகோரள கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

kaithu
kaithu

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் 4 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களை தொடர்ந்து மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்