வவுனியாவில் வீட்டில் பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது!

kaithu
kaithu

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்த நபர் ஒருவரை காவற்துறையினர் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா பூவரசன்குளம் காவற்துறை பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பூவரசங்குளம் காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த காவற்துறையினர் அவரிடமிருந்து பெற்றோல் என்பனவற்றையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்