3,900மெற்றிக்தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

ship4
ship4

3,900 மெற்றிக்தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை இன்று வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.