பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் கத்தியால் தாக்கப்பட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (10) 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.