பராமரிப்பு அற்ற காணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

66
66

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பகுதியில் – நீண்டகாலமாக பராமரிப்பு அற்ற காணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் நீண்ட காலமாக பல காணிகள்  உரிமையாளரின் பராமரிப்பு இன்றி கலாச்சார பிரழ்வுகள் ,போதைப்பொருள் பாவனை, சட்டவிரோதச்செயற்பாடுகள் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கான அசௌகரியங்கள், நுளம்பு மற்றும் விசஜந்துக்களின் பெருக்கம், எனபன  அதிகமாக காணப்படுவதாக மக்களிடம் இருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கபெறுகிறது.

எனவே காணி உரிமையாளர்கள் உடனடியாகச்செயற்பட்டு தங்களது காணிகளை துப்பரவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அவ்வாறு துப்பரவு செய்ய தவறும் பட்சத்தில் பொது மக்கள் நன்மை கருதி குறித்த காணிகள் சபை நிதியில் துப்பரவு செய்யப்படுவதுடன் அதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தும் குறித்த காணியின் இன்றைய சந்தைப்பெறுமதியின் 2% வீதம் உரிமையாளர் / பராமரிப்பளரிடம் இருந்து சட்டபூர்வமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.