நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து வறுமை கோட்டிற்குட்பட்டவர்களிற்கான உதவிப்பொருட்கள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக விவசாய உபகரணங்கள், மீன்பிடிவலைகள், மற்றும் துவிச்சக்கரவண்டிகள் உட்பட 6 மில்லியன் பெறுமதியான உதவித்திட்டங்கள் 173 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிதிட்டமிடல் பணிப்பாளர், பயனாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.