மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து

1655104390 Crime 2
1655104390 Crime 2

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

அத்துடன் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருமாக 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீதே இன்று அதிகாலை கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கு இடையில் கடந்த தினத்தில் இடம்பெற்ற மோதலில் சகோதரர்கள் இருவர் பலியாகினர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவுவதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை கொலை செய்த 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய 15 பேரையும் கைது செய்வற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக உயிலங்குளம் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.