4,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகிறது

124427938 kanchanawijesekera02
124427938 kanchanawijesekera02

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ருவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ள பின்னணியில் அதற்காக மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது