வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு!

IMG 20220629 101641 2
IMG 20220629 101641 2

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்க நேற்றைய தினம் இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. 

IMG 20220629 101751

குறித்த நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி, பட்டினிச்சாவை தடுக்க மக்களே முன்வாரீர் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

IMG 20220629 101622

இதன் முதற்கட்டமாக நேற்றைய தினம் வவுனியா இலுப்பையடி சந்தியில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இந்நடவடிக்கையில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பல மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.