இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை!

1 DAKLAS
1 DAKLAS

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இந்த பதிலை வழங்கினார்.

நேற்றும் கூட இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள், நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பில் தாமும் இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண முயன்று வருவதாக குறிப்பிட்ட அவர், விரைவில் இதற்கான தீர்வைக்காண முடியும் என்று நம்பிக்கையை வெளியிட்டார்.