சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

kaithu
kaithu

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன்,20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி காவல் நிலையத்தில் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.