கப்ரால் வெளிநாட்டு செல்ல தொடர்ந்தும் தடை!

ajith N kabral
ajith N kabral

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு  முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதன் காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.