வவுனியா நெடுங்கேணி பகுதியில் துப்பாக்கி சூடு; யுவதி பலி!

IMG 20221019 073220
IMG 20221019 073220

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று (18) இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். 


சிவா நகர் பகுதியில் வசிக்கும்துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இத்துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.