இலங்கை கடலில் மீன்பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

fishermen 1574149624
fishermen 1574149624

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்கள் பயணித்த 5 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.