வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூர்வு!

IMG 20221202 WA0060
IMG 20221202 WA0060

வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேரை நினைவுகூறும் நிகழ்வு இன்று சேமமடுவில் இடம்பெற்றது.

IMG 20221202 WA0057


இதன்போது புலம் பெயர்ந்து வாழும் கிராமத்தவர்கள் நிதி பங்களிப்பில் சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கிராமத்தில் 1000 மரக்கன்று நாட்டும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இதைவேளை கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆதிவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.


இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.