வவுனியா நகரசபையால் இருவேறு கட்டட தொகுதிகள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
![IMG 20221206 094831](https://thamilkural.net/wp-content/uploads/2022/12/IMG_20221206_094831-1024x478.jpg)
உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் கீழ் பூங்காவினுள் பொது நிகழ்வுகளுக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய திறந்த மேடை மற்றும் வவுனியா நகரிலே இறைச்சிக்கடைக்கான 06 கடைகளினை உள்ளடக்கிய கட்டட தொகுதி ஆகியவற்றினை வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனினால் திறந்து வைக்கப்பட்டது.
![IMG 20221206 094658 1](https://thamilkural.net/wp-content/uploads/2022/12/IMG_20221206_094658_1-1024x478.jpg)
இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் சுஜன், மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இரு கட்டட தொகுதிகளும் 16 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.