இலங்கைக்கு நவீன பேருந்துகளை இறக்குமதி செய்ய முடிவு

images 1 4
images 1 4

இலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக இரண்டாயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த பேருந்துகள் இறக்குமதிக்காக சுமார் 750 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துவதன் காரணமாக புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் கைளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.