இரண்டு பதவிகளுக்கு புதிய நியமனங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மகிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.