பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன்!

1672278486 theif 2
1672278486 theif 2

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளது.

வீட்டவர்கள் காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.

அதன் பின்னர் திருடனை நையப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.