இன்று பாடசாலைகள் மீள ஆரம்பம் – ஜனவரி 21 இல் மூன்றாம் கட்ட விடுமுறை

school 1 1

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்ட, கற்றல் செயற்படுகள், இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 திகதியுடன் நிறைவடையவுள்ளது.

பின்னர் ஜனவரி 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 21 திகதி முதல் எதிர்வரும், பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.