தவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதவாச்சி பகுதியில் விஷேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மதவாச்சி பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதை மாத்திரைகளுடன் மதவாச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.