கிளிநொச்சியில் ஆண் ஒருவர் கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

vilakam
vilakam

கிளிநொச்சி – உருத்திரபும் பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் கடந்த 13ஆம் திகதி மரணவீடு ஒன்றில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் மேலும் ஒரு சந்தேகபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும், எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.