உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள்
சபைக்குள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர், எதிரணியினர் சபைக்கு நடுவே வந்தனர்.
” தேல்தலை நடத்து, தேர்தலை நடத்த நிதி வழங்கு” உட்பட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதைதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.