ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு – ஜனாதிபதி உத்தரவு

ranil 2
ranil 2

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.