இந்திய – இலங்கை கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம்!

ship
ship

இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக  IndSri Ferry Service  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த கப்பல் சேவை மார்ச் மாதத்தில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பின்னர், துறைமுக உட்கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களால், அதனை இந்தமாதம் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தியாவின் சில அனுமதிகள் கிடைக்கப்பெறாமையினால் குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இருந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

150 பயணிகள் இந்த கப்பல் சேவையில் ஒரே தடவையில் பயணிக்க முடியும் என்பதுடன் 50 அமெரிக்க டொலர், ஒரு வழி கட்டணமாக அறவிடப்படவுள்ளது.