சிகிரியா மலைக்குன்றின் நிறம் மாறி வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிரியா மலைக்குன்றின் மேற்பரப்பிலுள்ள கருங்கற்களின் நிறம் வெள்ளை நிறமாக மாறியுள்ளமையினாலும் மலைக்குன்றின் உச்சியில் உள்ள குளியல் தொட்டியின் பல இடங்களில் திடீரென நிறம் மாறியுள்ளமையினாலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கை, தொல்பொருள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.