கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது ஆதரவு யாருக்கு என்று அறிவிப்போமென தெரிவித்துள்ளார்.
எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் அடிப்படை உரிமைகளை கூட இதுவரை வழங்கவில்லை. எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இதனாலேயே மக்கள் தங்களுக்கு ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.
அந்தவகையில் எமது மக்களைக் கொன்று குவித்து பெரும்
மனிதப் படுகொலைகளை செய்தவர்களும் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்தே எமது ஆதரவினை யாருக்கு வழங்குவது என தீர்மானிக்கப்படும் என மாவை குறிப்பிட்டிருந்தார்.