பாடசாலை சீருடையில் பேரூந்திற்காக காத்திருக்கின்ற மாணவர்களை சேவைத் தூரத்தினை கருத்தில் கொள்ளாது அனைத்து பேரூந்துகளும் ஏற்றிச்செல்ல வேண்டும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.செவ்வேள் தெரிவித்துள்ளார்.
எனவும் தவறும் பட்சத்தில் பேரூந்து உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் பொருட்டு இரு மேலதிக பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.